Saturday, May 8, 2010

பாம்புகள்

13.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல்லி இனத்தில் இருந்து உருமாற்றம் அடைந்ததே பாம்பு இனம் என்று அறிவியல் அறிஞர்களின் கணிப்பு. உலகத்தில் மொத்தம் 2750 பாம்பு இனங்கள் உள்ளது. இந்தியால் 256 பாம்பு இனங்கள் உள்ளது. இதில் 52 வகை நச்சுத்தன்மை கொண்டவை.
உலகில் மிக நீளமான பாம்பு ரீகல் ஆகும். இது 28அடி நீளம் கொண்டது. மிக நீளமான விசப்பாம்பு ராஜநாகம். இது 18அடி நீளம் கொண்ட்து. மிக சிறிய பாம்பு புழுப்பாம்பு அல்லது குருட்டுப்பாம்பு 7அங்குலம் கொண்டது. இவை அனைத்தும் இந்தியாவில் உள்ளது.
பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. உ.ம். விரியன்கள், பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்பு தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாம்பு இனங்கள் ஊன்உண்ணி வகையைச்சார்தவை. முட்டை உண்ணும் பாம்புகள் வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ளது. ராஜநாகம் பிற பாம்புகளை உண்வாக உண்ணும். பாம்புகள் பகலில் கண்ணால் உணவை தேடுகின்றன. இரவில் வாய் உறுப்பு மூலம் உணவை தேடுகின்றன. பாம்பு வெளியில் நீட்டும் நாக்கு உணவின் சுவையை அறிவதற்கு உதவுகிறது. அவை காற்றில் உள்ள வாசனை துகள்களை எடுத்து ஜேகப்ஸன் என்ற வாய் உறுப்பிற்கு அனுப்பி உணவை தேடுகிறது.பாம்பின் மண்டை ஓட்டு எலும்புகள் பின்னி பிணைந்துள்ளதால், அது தன்னை விடப்பெரிய விலங்கை விழுங்குகிறது.
பாம்பிற்கு வெளிக்காது, நடுக்காது கிடையாது. ஆனால் தரையின் அதிர்வை உள்காதிற்கு அனுப்பி நிகழ்வுகளை உணருகின்றன. பாம்புகள் குறைந்தது 100Hz முதல் 700Hz வரை அலைநீளத்தை உணருகின்றன. பாம்புகளுக்கு கண் இமைகள் கிடையாது. ஒளி ஊடுருவும் படலத்தை கண் விழிகள் பெற்றுள்ளன. பாம்புகள் தோல் உரிக்கும். தோல் உரிக்கும் போது விழிப்படலமும் உரிக்கப்படுகிறது.
மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் ராஜநாகம் மற்றும் கடற்பாம்பு. பாம்பின் பல்லில் இருந்து எடுக்கப்படும் நஞ்சு குதிரைக்கு செலுத்தி, அதன் இரத்தத்தில் உண்டாகும் ‘எதிர்ப்பு அணுக்கள்’ மருந்தாகப்பயன்படுகிறது. நல்லபாம்பு (அ) நாகப்பாம்பு, கட்டுவிரியன் (அ) கருவேலன்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவற்றில் இருந்து நஞ்சு (இந்தியாவில்) எடுக்கப்படுகிறது. சென்னையில் கிங்நிலையம், பூனாவில் ஹாப்கிஸ் நிலையம் மற்றும் சீரம் நிலையம், சிம்லாவில் மத்திய ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் நஞ்சு முறிவு மருந்து தயார் செய்யப்படுகிறது.
இருதலைமணியன் (அ) சிவப்பு நிற பாம்பிற்கு இருதலைகள் கிடையாது. மொட்டையான வால் பகுதி தலைபோல் கணப்படும். கொம்பேறி மூக்கன் (அ) மரம் ஏறிப்பாம்பிற்கு நஞ்சுக்கிடையாது. மண்பாம்புகள் கடித்தால் தோல் வியாதி வரும் என்பது கட்டுக்கதை. பச்சை பாம்பின் மூக்கு கூர்மையானது. இது கண்ணை கொத்தும் என்பது கட்டுக்கதை. சாரையும் நல்லப்பாம்பும் இணையாது. நல்லபாம்பிற்கு வயதானால் இறக்கை முளைக்கும், மாணிக்கம் உண்டாகும் என்பது கட்டு கதைகள்.